கணவர் இறந்துவிட்டால், அவர் பெயரில் உள்ள சொத்து முழுவதும் மனைவிக்குச் சொந்தமாகிவிடுமா?: இருப்பினும், கணவர் சொந்தமாகச் சம்பாதித்து வாங்கிய சொத்து தொடர்பான விதிகள் முற்றிலும் மாறுபட்டவை என்று அவர் கூறினார். “கணவர் தனது பெயரில் உள்ள சொத்து குறித்து உயில் ஏதும் எழுதாமல் இறந்துவிட்டால், இந்து வாரிசுரிமைச் சட்டத்தின்படி, மனைவியும் குழந்தைகளுமே சட்டப்பூர்வ வாரிசுகளாகக் கருதப்படுவார்கள். அத்தகைய சூழலில், அச்சொத்தின் மீது அவர்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டு. வாரிசுதாரர் ஒருவர் மட்டும் சொத்து முழுவதையும் தன்வசப்படுத்திக்கொள்வதோ அல்லது மற்ற சட்டப்பூர்வ வாரிசுகளின் உரிமைகளை மறுப்பதோ சட்டப்படி செல்லாது. சட்டத்தின்படி, தகுதியுள்ள ஒவ்வொரு வாரிசுதாரருக்கும் ஒரு பங்கு கிடைக்கும்,” என்று அவர் விளக்கினார். (AI புகைப்படம்).


