Last Updated:
முதல் கட்டப் பகுதி 2027-ஆம் ஆண்டில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் கனவுத் திட்டமான மும்பை – அகமதாபாத் அதிவேக ரயில் பாதை (MAHSR) அமைக்கும் பணியில் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மற்றும் பால்கர் மாவட்டங்களை உள்ளடக்கிய 135.45 கி.மீ தூர வான்வழிப் பாதையில் (Elevated section) 100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்குத் தூண்கள் (Piers) கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


