தனிப்பட்ட பயணமாக கடந்த 26-ம் தேதி பெங்களூருவுக்கு வருகை தந்த பிரிட்டன் அரசர் சார்லஸ் புதன்கிழமை அதிகாலை திரும்பச் சென்றுள்ளார்.
பிரிட்டன் அரசர் சார்லஸ் தனது மனைவி கமிலாவுடன் தனிப்பட்ட பயணமாக கடந்த 26-ம் தேதி பெங்களூரு வந்துள்ளார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ஒயிட்ஃபீல்டில் உள்ள சவுக்கியா ஆரோக்கிய மையத்துக்கு இருவரும் சென்றுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சார்லஸ் அறிவித்த நிலையில், அவரது இந்த மருத்துவ சிகிச்சைக்கான பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
4 நாள் சிகிச்சைக்குப் பிறகு அரச தம்பதியர் புதன்கிழமை அதிகாலை பெங்களூருவில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
மிக மிக ரகசியமாக வைக்கப்பட்ட இந்த வருகை, ‘சூப்பர் பிரைவேட்’ என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட வருகை என்பதாலேயே, மாநில அரசு முறையான வரவேற்பை வழங்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
Also Read |
இந்தியர்களிடையே நீரிழிவு நோய் இந்த உணவுகளால்தான் தூண்டப்படுகிறது..! – ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
சார்லசும் கமிலாவும் விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு வந்தபோதும், பின்னர் அங்கிருந்து மீண்டும் விமான நிலையத்துக்கு திரும்பியபோதும் போக்குவரத்து கவனமாக நிர்வகிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)