ஐஐடி-யில் படித்த மாணவர்கள் தங்கள் படைப்பாற்றல், விடாமுயற்சி மற்றும் வழக்கத்திற்கு மாறான புதுமையான சிந்தனை ஆகியவற்றுக்கு பெயர் பெற்றவர்கள். இத்தகைய ஐஐடி பட்டதாரிகள் தான் தற்போது உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் சிலவற்றின் தலைமை பொறுப்பில் உள்ளனர். அதற்கு சிறந்த உதாரணம் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை.
இவர்கள் நல்ல ஊதியம் பெறும் பதவிகளுக்கு முக்கிய நிறுவனங்களால் அடிக்கடி பணியமர்த்தப்படுகிறார்கள். எனினும் ஐஐடியில் படித்த சிறிய சதவீதத்தினர் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லாமல், சொந்தமாக தொழில் தொடங்கவே விரும்புகிறார்கள். ஆனால் பெரும்பான்மையானவர்கள் அதிக ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகளையே ஏற்றுக்கொள்கிறார்கள்.
அன்குஷ் சச்தேவா ஒரு ஐஐடி பட்டதாரி ஆவார். ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவரான அங்குஷ் சச்தேவா, பட்டப்படிப்பைத் தொடர்ந்து சொந்தமாக தொழில் தொடங்கினார். ஆனால் அவர் நினைத்தது போல் அதில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், சச்தேவா விடாப்பிடியாக இருந்தார். எப்படியாவது தொழிலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் வேறொரு தொழிலைத் தொடங்கினார், ஆனால் அதுவும் தோல்வியடைந்தது.
ஒருவேளை உங்களுக்குத் தெரியாவிட்டால், ஷேர்சாட் (ShareChat) என்ற செயலி இந்திய பார்வையாளர்களை மையமாகக் கொண்ட சோசியல் நெட்வொர்க் தளமாகும். இந்த தளத்தில் தற்போது பதினைந்து மொழிகள் உள்ளன: ஆங்கிலம், பெங்காலி, ஒடியா, கன்னடம், அசாமிஸ், ஹரியான்வி, ராஜஸ்தானி, போஜ்புரி, இந்தி, மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளைச் சேர்ந்த யூசர்கள் அவர்களது தாய்மொழியிலேயே இந்த செயலியை பயன்படுத்த முடியும்.
இந்தியாவின் சிறிய நகரங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களில் இருக்கும் யூசர்களுக்கு இடையே இணைப்பை எளிதாக்கும் ஒரு உள்ளூர் சமூக ஊடக தளத்தின் தேவை இருப்பதை அங்குஷ் சச்தேவா கண்டார். இதுவே ஷேர்சாட் நிறுவனத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.
சோமர்வில் பள்ளியில் படித்த அங்குஷ் சச்தேவா, கணினி அறிவியல் பிரிவில் இளங்கலை தொழில்நுட்பம் (பி.டெக்.) படிக்க ஐஐடி கான்பூரில் சேர்ந்தார். 2015-ம் ஆண்டு பட்டம் பெற்ற அங்குஷ், மே முதல் ஜூலை 2014 வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். 17 முறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி தோல்வியடைந்த போதும், அங்குஷ் சச்தேவா தனது இரண்டு ஐஐடி நண்பர்களான ஃபரித் அஹ்சன் மற்றும் பானு சிங் ஆகியோருடன் கைகோர்த்து, ஷேர்சாட் செயலியை கொண்டு வந்தார். இந்த செயலி அக்டோபர் 2015-ல் தொடங்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள ( இந்திய மதிப்பில் ரூ.40,000 கோடிக்கும் அதிகமாகும்) நிறுவனமாக ஷேர்சாட் உள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)