Last Updated:
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி மீண்டும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா என்பது குறித்து இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், 2011 உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றவருமான ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.


