தலைநகர் கராகஸ், லா குவைரா ஆகிய பகுதிகள் பேரழிவு மண்டலங்களாக மாறியுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகளும், வணிக வளாகங்களும் சீட்டுக்கட்டுகளைப் போல சரிந்து விழுந்ததால், ஒட்டுமொத்த நகரமும் தூசு மண்டலமாக மாறியுள்ளது. ஏராளமான மின் கம்பங்களும் முறிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் சாலைகளில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால், காணும் இடமெல்லாம் கான்கிரீட் குவியல்களாக காட்சியளிக்கின்றன.


