யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்த வங்கிப் பிரிவில் தற்போது மீண்டும்
அனைத்து வகைக் குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை யாழ்ப்பாணம்
போதனா மருத்துவமனை இரத்த வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வாரம் நான்கு குருதிக்கொடை முகாம்கள் இரத்தாகியதால், குருதிச்சேகரிப்பு
பாதிக்கப்பட்டுள்ளது.
உயிர் காக்கும் உன்னத பணி
குருதிக்கொடையாளர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்த வங்கியின் 12 ஆம்
இலக்க நுழைவாயில் ஊடாகத் தினமும் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை வந்து
குருதிக்கொடை வழங்கி உயிர் காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்த வங்கிப் பிரிவினர் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

