Last Updated:
இருநாடுகளுக்கும் இடையேயான இந்த தாக்குதலால், உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.
ஈரான் மற்றும் இஸ்ரேல் மீண்டும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டதால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தன.
கடந்த பிப்ரவரி மாதம் முதலே ஈரான் – இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் இருந்தாலும் அவ்வப்போது தாக்குதல் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக பெய்ரூட் நகரின் தெற்குப் புறநகர்ப் பகுதிகள் மீது இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இந்நிலையில் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக் கூடாது என்ற விதிமுறையை இஸ்ரேல் மீறிவிட்டதாக ஈரான் கூறி வந்தது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல் படை இஸ்ரேலின் நெவாடிம் (Nevatim) மற்றும் டெல் நோஃப் (Tel Nof) ஆகிய முக்கிய ராணுவ விமானத் தளங்களை நோக்கிப் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
Attacks between the Islamic Republic and Israel over the past few hours
Since the beginning of negotiations with the United States, the Islamic Republic has continuously called for a regional ceasefire, including in Lebanon, stating that if Israel continues to attack Lebanon, it… pic.twitter.com/sff4TjSY3t— Iran Observatory (@IRObservatory) June 8, 2026
எனினும் அவைகளை நடுவானிலேயே மறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் வீசிய ஏவுகணை ஒன்று மேற்கு கரை பகுதியில் விழுந்தது. மேலும் இந்த தாக்குதலில், சில தற்காலிக குடியிருப்புகளும் சேதமடைந்தன. ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து டெல் அவிவ் நகரில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இருநாடுகளுக்கும் இடையேயான இந்த தாக்குதலால், உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.


