யாழில் பற்றைக்காடொன்றில் இருந்து சுமார் 09 கிலோ கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ். கொடிகாமம் பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் இருந்தே குறித்த பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான பொதிகள் காணப்படுவதாகக் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
கஞ்சா பொதிகள்
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பொதிகளை மீட்டுச் சோதனையிட்டுள்ளனர்.

அதன் போது பொதிக்குள் சுமார் 09 கிலோ கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளைக் காவல் நிலையம் எடுத்துச் சென்ற காவல்துறையினர், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

