யாழில் வீதியில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து சுன்னாகம் காவல்துறையினர்
ஊடாக உரியவரிடம் சேர்ப்பித்த நெகிழ்வான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், சுன்னாகம் வர்த்தக வங்கிக்கு முன்பாக தங்க ஆபரணம் ஒன்று கீழே
விழுந்து காணப்பட்டது.
பார்த்தீபனின் நேர்மை
குறித்த தங்க ஆபரணத்தை கண்டெடுத்த குப்பிளான் பகுதியை சேர்ந்த செல்வராசா பார்த்தீபன் என்பவர் அதனை சுன்னாகம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

அதன்பின்னர் சுன்னாகம் காவல் நிலைய பொறுப்பதிகாரி நிதர்சன் தலைமையிலான காவல்துறை குழுவினர், குறித்த நகையின் உரிமையாளரான ஏழாலை பகுதியை சேர்ந்த முதியவரை
கண்டுபிடித்தனர்.
அதன்பின்னர் அந்த முதியவரை அழைத்து நகையை கண்டெடுத்த பார்த்தீபனின் கையாலேயே
அந்த நகையை முதியவரிடம் ஒப்படைத்தனர்.
வீதியில் கண்டெடுக்கப்பட்ட நகையை நேர்மையாக உரியவரிடம் சேர்ப்பித்த
பார்த்தீபனின் நேர்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

