• Login
Sunday, September 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

திடீர் கனமழையால் தலைநகரில் பரபரப்பு: பல இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் நீரில் மூழ்கின! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
September 20, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
திடீர் கனமழையால் தலைநகரில் பரபரப்பு: பல இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் நீரில் மூழ்கின! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கோலாலம்பூர் மற்றும் அம்பாங்கை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்ததில், வாகனங்களுக்குள் சிக்கித் தவித்த மூவர் தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

முதல் சம்பவம் அம்பாங், ஜாலான் மெங்குடுவில் உள்ள ‘டஸ்கனி ஹோம் ஃபர்னிச்சர்ஸ்’ அருகே நிகழ்ந்துள்ளது. சுமார் 3 அடி உயரத்திற்கு வெள்ளநீர் பெருகியதில் காரொன்று அதில் சிக்கிக்கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கெராமாட் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 6 வீரர்கள், காரில் இருந்த ஒருவரைப் பாதுகாப்பாக மீட்டனர்.

இரண்டாவது சம்பவம் கோலாலம்பூர், தாமான் யூ-தாண்ட் (Taman U-Thant), தேசா அங்கசா கொண்டோமினியம் அருகே நிகழ்ந்தது. அங்கு சுமார் 2 அடி உயர வெள்ள நீரில் சிக்கிய பிஎம்டபிள்யூ (BMW) சொகுசு காரில் இருந்த இருவர், ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 5 வீரர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

“இரண்டு சம்பவங்களிலும் கார்களுக்குள் சிக்கிய மூன்று நபர்களும் எவ்விதக் காயங்களுமின்றி நலமாக மீட்கப்பட்டுள்ளனர்.” என்று, கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அம்பாங், உக்காய் பெர்டானா ஹைட்ஸ் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் வெள்ளநீர் புகுந்ததைத் தொடர்ந்து சிலாங்கூர் தீயணைப்புத் துறையினரின் உதவி நாடப்பட்டது. வெள்ள நீரில் மின்சாரம் பாயும் அபாயம் இருப்பதாக வீட்டின் உரிமையாளர் அச்சம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கெராமாட் தீயணைப்புப் படையினர் உடனடியாக அங்கு விரைந்து சென்று உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

மேலும், கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் உள்ள மேனாரா சாஃபுவான் கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்திலும் வெள்ளநீர் புகுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் எவரும் பாதிக்கப்படவில்லை. திதிவங்சா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் அங்கு நிலைமையைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.



Read More

Previous Post

ஹோம் லோன் Vs ப்ராப்பர்ட்டி லோன்.. யார் எதைத் தேர்ந்தெடுக்கலாம்? வட்டி எப்படி இருக்கும்? | Home Loan vs Property Loan: which long suits for you?

Next Post

ஊவாபரணகமவில் மலை வெடித்தது | Tamilmirror Online

Next Post
ஊவாபரணகமவில் மலை வெடித்தது | Tamilmirror Online

ஊவாபரணகமவில் மலை வெடித்தது | Tamilmirror Online

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin