
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் நேற்று தனியார் பஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவ்விபத்தில் பாலமுனையைப் பிறப்பிடமாகவும், அட்டாளைச்சேனை – 08 அக்கரையை வசிப்பிடமாகவும் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான அப்துல் சமது முபாரிஸ் என்பவரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

