முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடுப்புக் காவலில் உள்ள முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே கொடூரமான முறையில் நடத்தப்படுவதாக எழுந்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் ‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’ எனும் தலைப்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தக் கடிதத்தில், தடுப்புக் காவலில் இருந்த உங்களது கட்சியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்டு, உயிர் பிரிவதற்கு முன்பாகவே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்ட காட்டுமிராண்டித்தனமான யுகத்தின் கொடூரமான வடுக்கள், இந்த ஜனநாயக நாட்டின் மீது மீண்டும் பதிவாகக் கூடாது என்பது அனைவரதும் மாறாத நம்பிக்கையாகும்.
கடிதத்தில் கையெழுத்திட்டோர்
எனவே, ஜனாதிபதி முன்னிலையில் வைக்கப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் சமநிலையான முறையில் ஆராய்ந்து, முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானியையும் ஒரு சாதாரண சந்தேகநபராகக் கருதி, சட்டத்தின் முன்னிலையிலான சமத்துவத்தை அவருக்கு வழங்குவதை உறுதி செய்வதில் உங்களது அன்பான கவனத்தை செலுத்துங்கள்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சட்டத்தரணி டிலான் பெரேரா, டி.பி. ஹேரத், கலாநிதி குணபால ரத்னசேகர, கரு கொடித்துவக்கு, வைத்தியர் திலக் ராஜபக்ஷ, வைத்தியர் உபுல் கலப்பத்தி, லலித் எல்லாவல மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! . |

