• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இலங்கையில் பாரிய இணைய மோசடி கும்பல் பிடிபட்டது: 173 இந்தியர்கள் உட்பட 198 பேர் கைது! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 12, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இலங்கையில் பாரிய இணைய மோசடி கும்பல் பிடிபட்டது: 173 இந்தியர்கள் உட்பட 198 பேர் கைது! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு:

இலங்கையில் சுற்றுலா விசா மூலம் தங்கியிருந்து பாரிய அளவிலான இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாக, 173 இந்தியர்கள் மற்றும் 25 நேபாளிகள் என மொத்தம் 198 வெளிநாட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காலி, இக்கடுவை மற்றும் மிதிகம ஆகிய சுற்றுலாப் பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை (மே 11) மாலை காவல்துறையினர் முன்னெடுத்த விசேட அதிரடிச் சோதனைகளின் போது இவர்கள் சிக்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலோர் 25 முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமான முறையில் இணையம் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டது இவர்களின் மீதான முக்கிய குற்றச்சாட்டாகும்.

மேலும் விசா விதிமுறைகளை மீறியது, அனுமதிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி சட்டவிரோதமாகத் தங்கியிருந்தது மற்றும் சட்டவிரோத வேலைவாய்ப்பு மற்றும் கள்ளச் சிகரெட்டுகளை உடமையில் வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு அனைத்துலக அளவிலான இணையக் குற்றக் கும்பல்களுடன் தொடர்பிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் இலங்கையைத் தளமாகக் கொண்டு, வெளிநாடுகளில் வசிப்பவர்களைக் குறிவைத்து மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகப் புலனாய்வுத் துறையினர் கருதுகின்றனர்.

இலங்கையின் சிறந்த இணைய இணைப்பு வசதி மற்றும் இலகுவான விசா நடைமுறைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி, இத்தகைய கும்பல்கள் நாட்டைத் தளமாக மாற்ற முயல்வதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து மட்டும் இணையக் குற்றங்கள் தொடர்பாக சீனா, வியட்நாம், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 626 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, சில நாட்களுக்கு முன்னர் 250 சீன நாட்டவர்கள் இதே போன்ற குற்றச்சாட்டில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

பயனர்களிடம் முறைகேடு… நெட்ஃபிளிக்ஸ் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு | World News (உலக செய்திகள்)

Next Post

Tamilmirror Online || அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்

Next Post
Tamilmirror Online || அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்

Tamilmirror Online || அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin