Last Updated:
சிங்கப்பூரில் அனைத்து சமூகத்தினரும் சமமாகவே நடத்தப்படுவதாக அந்நாட்டு உள்துறை இணையமைச்சர் எட்வின் டாங் விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய வம்சாவளியினருக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு எச்சரித்துள்ளது.
சிங்கப்பூர் மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினர் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மலாய் இனத்தவர் 15 சதவீதம் பேர் வசிக்கும் நிலையில், ஏழு முதல் ஒன்பது சதவீதம் பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் அரசு நிறுவனங்கள் மற்றும் அரசியலில் இந்தியர்கள் அதிகளவு பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பப்படுவதாகப் புகார் எழுந்தது.
அதனடிப்படையில், இந்திய வம்சாவளியினருக்கு எதிராக யூடியூப், எக்ஸ், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் வெளியான 14 பதிவுகளை இணைய குற்றவியல் அச்சுறுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கி சிங்கப்பூர் காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் இருந்து இந்த பதிவுகள் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், சிங்கப்பூரின் உள்நாட்டுச் சமூக அமைப்பை சீர்குலைக்கும் விதமாக சமூக வலைதளங்களில் இதுபோன்று அவதூறு பரப்பப்படுவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.


