இந்த அதிபர் வரிசை சட்டத்தின்படி அதிபர் பதவியில் இருப்பவர் பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டால், அந்நாட்டின் துணை அதிபர் அடுத்து அதிபர் பதவிக்கு வருவார். ஒருவேளை அதிபர், துணை அதிபர் என இருவருமே பதவியில் இல்லாவிட்டால் அடுத்தபடியாக மக்களவைத் தலைவரும், அவரும் இல்லையென்றால் அடுத்து செனட் சபையின் மூத்த உறுப்பினரும், அவருக்கு அடுத்தபடியாக அரசுச் செயலாளரும் (Secretary of State), தொடர்ந்து நிதித்துறை செயலாளரும் (Secretary of the Treasury), அடுத்தபடியாக பாதுகாப்புத்துறை செயலாளரும் (Secretary of Defense), அவரும் இல்லையென்றால் தலைமை வழக்கறிஞரும் (Attorney General) பொறுப்புக்கு வருவர்.


