தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு:
ட்ரம்ப்பின் இந்த சட்டம் மக்களின் குரலை அடக்குவதாக உள்ளது என சூரியின் வழக்கறிஞர் வாட்திட்டுள்ளார்.
வர்ஜீனியாவின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி பாட்ரிசியா டோலிவர் கில்ஸ் இந்த வழக்கில், “நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை, சூரியை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றக்கூடாது” என்று உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் கருத்து:
“ஹமாஸ் ஆதரவு போன்ற போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வது என்பது மக்களின் குரலை அடக்குவது ஆகும். இதற்காக ஒருவரை அவர்களது வீட்டில் இருந்து பிரிப்பது, நாட்டை விட்டு அனுப்புவதெல்லாம் மிகப்பெரிய தவறு” என்று அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன் கூறியுள்ளது. ட்ரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன்.
சூரி குறித்து அவரது பல்கலைக்கழகம், “முறையான விசா மூலம் “ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது’ குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருபவர் சூரி. சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக எங்களுக்கு தெரியவில்லை. அவரது கைது குறித்து எங்களுக்கு எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளது.

