உக்ரைனில் போரில் ஈடுபடும் இளவயதினர் வயதை 18 ஆக குறைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. தற்போது 25 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள் அனைவரும் கட்டாயம் ராணுவத்தில் ஈடுபட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், உக்ரைன் இழந்த வீரர்களுக்கு இணையாக வீரர்களைத் திரட்டுவதிலும், புதிய வீரர்களுக்கு போதுமான பயிற்சி அளிப்பதிலும் கோட்டைவிடுவதாகப் பேசியிருக்கிறார்.
ரஷ்யா நிலையாக கிழக்கு நோக்கி முன்னேறுவதாகவும், இந்த நேரத்தில் ஆள்பலம் மிகத் தேவையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தித் தளம்.

