Last Updated:
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியிருந்ததாக கூறிவந்த நிலையில், டிரம்ப்பின் இந்த எச்சரிக்கை, மீண்டும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
ஹோர்மூஸ் நீரிணையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட அமெரிக்க ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்திய ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஓமன் கடற்கரையை ஒட்டிய ஹோர்முஸ் நீரிணையில், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஆரம்பத்தில் இது இயந்திரக் கோளாறா அல்லது தாக்குதலா என்று அமெரிக்க ராணுவம் விசாரித்து வந்த நிலையில், ஈரானிய ட்ரோன் ஒன்று மோதியதே இந்த விபத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகக் கூறினார். அப்பாச்சி ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள், விபத்துக்குப் பிறகு ஆளில்லா கடல் ட்ரோன் மூலம் மீட்கப்பட்டனர் என்றும் இருவரும் பாதுகாப்பாகவும் காயமின்றியும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியிருந்ததாக கூறிவந்த நிலையில், பதிலடி கொடுப்போம் என அதிபர் டிரம்ப் கூறியிருப்பது மீண்டும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.


