இஸ்ரேல் வான் படையை மேலும் பலப்படுத்த ஏவுகணை தடுப்பும், அமெரிக்க வீரர்களையும் இஸ்ரேலுக்கு அனுப்ப உள்ளது அமெரிக்கா.
இது குறித்து, அமெரிக்க பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஏப்ரல் 13-ம் தேதி மற்றும் அக்டோபர் 1-ம் தேதி நடந்த இஸ்ரேல் மீதான ஈரானின் எதிர்பாராத தாக்குதலையொட்டி, இஸ்ரேல் வான் படையை பலப்படுத்த THAAD (Terminal High-Altitude Area Defense) என்னும் பேட்டரியையும், அதை இயக்கும் அமெரிக்க வீரர்களையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவின் படி, இஸ்ரேலுக்கு அனுப்ப உள்ளோம். இந்த பேட்டரி இஸ்ரேலின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்தும்.
இந்த நடவடிக்கை இஸ்ரேல் பாதுகாப்பில் அமெரிக்காவிற்கு இருக்கும் உறுதிப்பாட்டை காட்டுகிறது. மேலும், இது இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்கர்களை காக்க எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்.—————————————————————————————–

