
ஹோர்மூஸ் நீரிணையை இன்று கடக்க முற்பட்ட வர்த்தகக் கப்பல்களுக்கு அவற்றை செல்ல அனுமதிக்கப்படவில்லை என ஈரானின் கடற்படையிடமிருந்து றேடியோ செய்திகளைப் பெற்றதுடன், இரண்டு கப்பல்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக கப்பல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவங்கள் ஹுஷெம், லரக் தீவுகளுக்கிடையில் நடைபெற்றுள்ளன. இக்கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடக்காமல் திரும்பியதாக தகவல் மூலங்கள் குறிப்பிட்டுள்ளன.

