• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ஹெல்மெட்டுக்கு கைவிலங்கு போட்டது ஏன்?: வைரலாகும் புகைப்படம்

GenevaTimes by GenevaTimes
August 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ஹெல்மெட்டுக்கு கைவிலங்கு போட்டது ஏன்?: வைரலாகும் புகைப்படம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




குற்றவாளிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லவும், சிறையில் பாதுகாப்பாக அடைக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய மிக முக்கியமான அரசுப் பொருளான கைவிலங்கு, செங்கல்பட்டு நகர காவல் நிலைய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு காவலரின் பைக்கில் ஹெல்மெட் திருடுபோய்விடாமல் இருக்கப் பூட்டப்பட்டிருந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நேரில் கண்ட பொதுமக்கள் மற்றும் அங்கு சாட்சிகளுக்காக வந்தவர்கள் இதனால் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது.


தமிழகத்தில் சமீபகாலமாகப் பெண் காவலர்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்தும் பல்வேறு தரப்பினர் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் தலைமைப் பெண் காவலராகப் பணியாற்றிய திருமதி தாமரைச்செல்வி, தனது கணவரால் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குடும்பப் பிரச்சினை தொடர்பாகக் காவல்துறையின் கவனத்திற்குப் புகார்கள் சென்றிருந்தும், ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாதது ஏன்? என்று வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியிருந்தார்.


அதேபோல, சிவகங்கை அருகே பெண் காவலர் ஒருவர் மூன்று பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியான செய்தியும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகப் பெண்களைப் பாதுகாக்க “சிங்கப்பெண் அதிரடிப்படை” உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுவது கொடூரமானது என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியிருந்தார்.


இத்தகைய சூழலில்தான், போலீசாரின் வாகனங்களுக்கும் பாதுகாப்பு இல்லையா என்ற கேள்தியை எழுப்பும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இந்தக் சம்பவம் அரங்கேறியுள்ளது.


பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வந்து செல்லும் ஒரு காவல் நிலைய வாசலிலேயே ஒரு காவலரின் ஹெல்மெட்டுக்குப் பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அங்கு என்ன உத்தரவாதம் இருக்க முடியும்? பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினர், தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு அதிகாரத்தையும் அரசுப் பொருட்களையும் இப்படிப்பட்ட சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்? சட்டம் மற்றும் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டியவர்களே இப்படி விதிகளுக்குப் புறம்பாகச் செய்யலாமா? என்றெல்லாம் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


மேலும், குற்றவாளிகளைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கைவிலங்கைத் தனிப்பட்ட பாதுகாப்புக்காகப் பயன்படுத்துவது துறை ரீதியான விதிமீறலாகும் என்பதால், சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.



Read More

Previous Post

சரவணன் தன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தி, தன்னை குற்றத்தில் சிக்கவைக்க MACC சாட்சிகளை வற்புறுத்தியதாகக் கூறி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் – Malaysiakini

Next Post

நேபாளம் பெருவெள்ளம்.. பலி எண்ணிக்கை 389ஆக உயர்வு.. 204 இந்தியர்களை காணவில்லை.. தேடுதலில் ராணுவம்! | Nepal Flood: Over 380 Dead, 1,000 Missing; Rescue Operations Intensified for Stranded Indians

Next Post
நேபாளம் பெருவெள்ளம்.. பலி எண்ணிக்கை 389ஆக உயர்வு.. 204 இந்தியர்களை காணவில்லை.. தேடுதலில் ராணுவம்! | Nepal Flood: Over 380 Dead, 1,000 Missing; Rescue Operations Intensified for Stranded Indians

நேபாளம் பெருவெள்ளம்.. பலி எண்ணிக்கை 389ஆக உயர்வு.. 204 இந்தியர்களை காணவில்லை.. தேடுதலில் ராணுவம்! | Nepal Flood: Over 380 Dead, 1,000 Missing; Rescue Operations Intensified for Stranded Indians

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin