International
oi-Yogeshwaran Moorthi
காத்மாண்டு: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 389ஆக உயர்ந்துள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன ஆயிரம் பேரவை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வரை இந்தியாவில் இருந்து நேபாளம் சென்ற 288 பேரில், 84 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை தரப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 150 கிமீ வடக்கே அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள ரசுவாகடி பகுதியில் போடேகோஷி ஆறு கீழ்நோக்கி பாய்கிறது. இந்த ஆற்றில் நேற்று முன்தினம் காலை திடீரென மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் இருபுறமும் இருந்த வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சாலைகள், சாலைகள், பாறைகள் அடித்து செல்லப்பட்டன.

இதன் காட்சிகள் வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் கோர தாண்டவத்தால் பல கிராமங்கள் உருக்குலைந்தன. நேபாளம் கடந்த சில ஆண்டுகளில் சந்தித்த மிகப்பெரிய பேரிடராக இந்த பெருவெள்ளம் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் புரட்டிப் போட்ட ரசுவா, சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதன்படி நேபாளம் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 389ஆக உயர்ந்துள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல் 977 பேரை தேடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த 977 பேரில் 517 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக மீட்பு பணிகளில் 7,250 நேபாள போலீசார், 4,200 நேபாள ராணுவத்தினர், 1,825 ஆயுத போலீஸ் என்று மொத்தம் 13,295 பாதுகாப்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் ஹெலிகாப்டர் மூலமாக தேடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வரை இந்தியாவில் இருந்து சுற்றுலா சென்ற 84 இந்தியர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் தமிழர்கள். அதேபோல் சீனா, அமெரிக்கா, மலேசியா, உக்ரைன், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உட்பட 30க்கும் அதிக நாடுகளில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் ம மாயமாகி இருக்கின்றனர்.
இதனிடையே தமிழக அமைச்சர்களான ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு உட்பட 4 அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். மத்திய அரசுடன் இணைந்து மீட்பு பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். நேற்றிரவே டெல்லி சென்ற அவர்கள், தமிழ்நாடு இல்லத்தில் மீட்பு பணிகளை பார்வையிட்டனர்.

