மாத்தறை, வெல்லமடம பகுதியில் டிஃபெண்டர் ரக வாகனமும், காரும், சிமெண்ட் ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில், டிஃபெண்டர் வாகனத்தின் சாரதி என சந்தேகிக்கப்படும் மாத்தறை, வெவஹமந்துவவைச் சேர்ந்த தினேஷ் உதயங்க (37) மற்றும் மாத்தறை, ஹித்தேட்டியவைச் சேர்ந்த எஸ்.எம்.வி. சுபாஷ் (36) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
அவர்களுடன் டிஃபெண்டர் வாகனத்தில் பயணித்த நால்வர் மற்றும் சிமெண்ட் லாரியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோரும் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த டிஃபெண்டர் வாகனமும் காரும் மாத்தறையிலிருந்து தங்கல்லையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, தங்கல்லையிலிருந்து மாத்தறை நோக்கி வந்த சிமெண்ட் லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் மேலதிக விசாரணைகளின் மூலம் கண்டறிந்துள்ளனர்.



