2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.
புதன்கிழமை (24) பிற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், “மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான கால அவகாசத்தை முறையாகக் கருத்தில் கொண்ட பின்னரே இந்தப் பரீட்சை கால அட்டவணை தயாரிக்கப்பட்டது. எனவே, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திகதிகளின்படியே பரீட்சைகள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார்.


