டி.கே.பி.கபில
ரூபாய் 66 இலட்சம் பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட் தொகையைச் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இந்தியாவைச் சேர்ந்த விமானப் பயணி ஒருவர், விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் வௌ்ளிக்கிழமை (14) அன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, 35 வயதுடைய காசாளராக பணிபுரிபவர் ஆவார்.
அவர் இந்த சிகரெட் தொகையைச் சீனாவில் விலைக்கு வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு வந்து, அங்கிருந்து ஏர் ஏசியா (AirAsia) விமானச் சேவைக்குச் சொந்தமான ஏ.கே.- 047 (AK-047) இலக்க விமானம் மூலம் வௌ்ளிக்கிழமை (14) அன்று அதிகாலை 12:30 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்து அடைந்துள்ளார்.
இதன்போது அவர் தன்னுடன் கொண்டுவந்த 3 துப்பரவுக் பைகளில் (பொதிகளில்), சீனத் தயாரிப்பான 44,000 சிகரெட்டுகள் அடங்கிய 220 சிகரெட் அட்டணங்கள் (Cartons) மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, இந்தச் சிகரெட் தொகையும் வௌ்ளிக்கிழமை (14) அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவரும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


