• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சல்லாப கணவனுக்கு மனைவி கொடுத்த பரிசு

GenevaTimes by GenevaTimes
May 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சல்லாப கணவனுக்கு மனைவி கொடுத்த பரிசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





பேருந்து ஒன்றில், பேரழகி ஒருவருடன் மிகவும் சூட்சுமமான முறையில் உரையாடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன், தான் பிள்ளையுள்ள ஒரு தந்தை என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட சுவாரஸ்யமான செய்தியொன்று வெளியாகியுள்ளது.


சம்பவம் வருமாறு:


அந்த இளைஞன் ஒரு குழந்தைக்குத் தந்தை; அத்துடன் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரிபவர். அவரது மனைவி அவர் மீது எப்போதும் அதிருப்தியிலேயே இருந்தார். அதற்குக் காரணம், அவர் ஒரு “பெண் பித்தராக” இருந்தமையாகும். அவரது அடங்காத வால்தனம் மற்றும் பெண்களுடனான தகாத தொடர்புகள் ஒருமுறை இருமுறை அல்ல, கைவிரல்களையும் தாண்டிய எண்ணிக்கையில் மனைவியிடம் கையும் மெய்யுமாக மாட்டிக்கொண்டிருந்தன.


இந்த சம்பவம், ஸ்ரீபுரத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த பஸ்ஸிலேயே இடம்பெற்றுள்ளது. 


சம்பவம் நடந்த அன்று, இந்தத் தம்பதியினர் தங்களது ஒரேயொரு குழந்தையுடன் அனுராதபுரம் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினர். பேருந்தில் இருக்கைகள் இருந்த நிலையைப் பொறுத்து, கணவன் முன் இருக்கை ஒன்றில் அமர, மனைவி தனது குழந்தையுடன் பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்தார்.


கணவன் அமர்ந்திருந்த இருக்கையின் ஓரத்தில், இளமைத் தோற்றம் கொண்ட ஒரு பேரழகி அமர்ந்திருந்தார். அவரது நடத்தையைப் பார்க்கும்போது அவர் ஒரு “துறுதுறுப்பான” (சுட்டித்தனம் கொண்ட) பெண் என்பது பலருக்கும் புரிந்தது. பேருந்து முன்னேறிச் சென்றுகொண்டிருந்தது. இடையில் தூங்கிப்போன மனைவி, திடீரென விழித்து பேருந்தின் முன் பகுதியை உற்று நோக்கினார்.


அங்கு அவர் கண்ட காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது கணவருடன் ஒரே இருக்கையில் அமர்ந்திருந்த அந்த இளம்பெண், கணவரின் முகத்திற்கு மிக அருகில் தனது முகத்தைக் கொண்டு சென்று நெருக்கமாக உரையாடிக்கொண்டிருந்தார். ஆனால், கணவர் தனது தலையைச் சிறிதும் அசைக்காமல், நேராகப் பார்த்தபடி அமர்ந்திருந்ததைக் கண்ட மனைவிக்குப் பெரும் சந்தேகம் ஏற்பட்டது.


“அப்படியானால் அந்தப் பெண் யாருடன் தான் பேசுகிறாள்?” என்ற கேள்வியுடன் மனைவி சிறிது நேரம் உன்னிப்பாகக் கவனித்தார். அப்போதுதான் அந்தப் பெண் பித்தரின் உண்மை முகம் வெளிப்பட்டது.


தனது மனைவி பின்னால் இருப்பதை அறிந்திருந்த அவர், தலையை அங்கிங்கு அசைக்காமல் மிகவும் சூட்சுமமான முறையில் அந்த அழகியுடன் “கடலை” போட்டுக்கொண்டிருப்பதை (பேசிக்கொண்டிருப்பதை) மனைவி உறுதிப்படுத்திக்கொண்டார்.


கோபம் தலைக்கேறிய மனைவி, வேகமாக ஆடிக்கொண்டு செல்லும் பேருந்தில் தனது குழந்தையைத் தூக்கிக்கொண்டு கணவன் இருந்த இருக்கைக்கு அருகில் வந்தார்.


“இந்தாருங்கள் உங்கள் பிள்ளையை! தன்னிடம் வருவேன் என்று இந்தப் பிள்ளை அடம் பிடித்துக் கத்துகிறது. பார்க்க ஏதோ வாலிபன் போல இருந்தாலும், பிள்ளை குட்டி உள்ள ஒரு தப்பப்பன் (தந்தை) என்ற பொறுப்பு சிறிதும் இல்லை! இதோ வைத்துக்கொள்ளுங்கள்!” என்று கத்தியவாறே பிள்ளையைக் கணவனின் மடியில் திணித்தார்.


பேருந்தில் இருந்த பெரும்பாலானோர் இந்தச் சம்பவத்தைக் கவனித்தனர். அந்த இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்த இளம்பெண் உடனடியாக எழுந்து, “அக்கா, நீங்கள் இங்கே அமருங்கள்,” என்று கூறிவிட்டுப் பேருந்தின் பின் பகுதிக்குச் சென்று மறைந்தார்.


அன்று மாலை வேளையிலேயே இந்தச் செய்தி கிராமம் முழுவதும் பரவியது. இப்போது அந்த இளைஞரைக் காணும் கிராம மக்கள், “அதோ போகிறார் பிள்ளையுள்ள ஒரு அப்பா!” என்று கிண்டலாகக் கூறுகிறார்களாம்.


 



Read More

Previous Post

அரசியல் பலம் இனி மேலாதிக்கத்தை வைத்து அளவிடப்படாது என்கிறார் ஜம்ரி

Next Post

மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கையில் மாநில ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Next Post
மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கையில் மாநில ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

மேற்கு வங்க வாக்கு எண்ணிக்கையில் மாநில ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin