பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது மாதாந்த சம்பளப் பட்டியலை உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அர்ச்சுனா வெளியிட்டுள்ள சம்பளப் பட்டியலின்படி,
அவருக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளப் பட்டியலுடன் பேஸ்புக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ள அர்ச்சுனா,
இந்த அதிகரிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதே தொகையை 159 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பெருக்கி பெலவத்தையில் உள்ள கணக்குகளுக்கு பணம் செலுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் 60,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அர்ச்சுனா பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். R



