
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டத்தின் எமிலினா பிரிவில் உள்ள ஒரு காய்கறித் தோட்டத்தில் சட்டவிரோதமாக இரண்டு கஞ்சா செடிகளை பயிரிட்டதாக சந்தேகத்தின் பேரில் மஸ்கெலியா காவல் துறை அதிகாரிகள் குழு சனிக்கிழக்கழமை (01) அன்று ஒரு தோட்டத் தொழிலாளியை கைது செய்தனர்.
மஸ்கெலியா காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ். புஷ்பகுமாரவுக்கு கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகளுடன், சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த பட்ட போது, சந்தேக நபரை ஐந்து லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டு, நவம்பர் மாதம் 11 ஆம் திகதியன்று ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்

