இதனால், தென் கொரியாவில் அரசியல் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையில், இடைக்கால அதிபராக நிதியமைச்சர் சோய் சாங்-மோக் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில், யூன் சுக் இயோல் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, கூட்டுப் புலனாய்வுத் தலைமையகத்தால் சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. மூன்று முறை சம்மன் அனுப்பியும் யூன் சுக் இயோல் ஆஜராகாததால், அவருக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த தென் கொரிய நீதிமன்றம், யூன் சுக் இயோலுக்கு எதிராகக் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

