Last Updated:
Pope Francis | இத்தாலியின் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் குணமடைந்து வருவதாக புனித பீட்டர்ஸ் தேவாலயம் தெரிவித்துள்ளது.
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் குணமடைந்து வருவதாக புனித பீட்டர்ஸ் தேவாலயம் தெரிவித்துள்ளது.
கடந்த 6-ஆம் தேதி மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டு போப் பிரான்சிஸ், கெமேல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், போப் பிரான்சிஸ்-க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக புனித பீட்டர்ஸ் தேவாலயத்தின் செய்தித் தொடர்பாளர் என்சோ தெரிவித்துள்ளார்.
Also Read: Zoo-விற்கு தனியாக வரும் ஆண்களுக்கு தடை… காரணம் கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க
இதற்கிடையே, போப் பிரான்சிஸ் இல்லாத தேவாலயத்திற்கு பலர் வந்து பிரார்த்தனை நடத்தினர். மேலும், கையில் சிலுவையை ஏந்தி அவர்கள் ஊர்வலமாக வந்தனர். அவர் விரைந்து குணமடைந்து தேவாலயத்துக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
February 16, 2025 2:01 PM IST


