இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இப்போது எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்வது முதல் விநியோகம் செய்வது வரையிலான அனைத்தும் டிஜிட்டல் கண்காணிப்பின் கீழ் இருக்கும். உங்கள் மொபைல் எண், ஆதார், இ-கேஒய்சி அல்லது இணைப்பு விவரங்களில் ஏதேனும் முரண்பாடு கண்டறியப்பட்டால், எரிவாயு விநியோகம் நிறுத்தப்படலாம். ஏற்கெனவே, பல மாநிலங்களில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் சந்தேகத்திற்கிடமான அல்லது போலி இணைப்புகளைக் கண்டறியும் பணியைத் தொடங்கியுள்ளன. ஆகையால், இது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


