Last Updated:
சாலைகளில் பெரிய பிளவுகள் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் சரிந்து விழுந்து தீப்பற்றி எரிந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள கியூஷு தீவுக்குட்பட்ட குமாமோட்டோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்று நிலநடுக்க அதிர்வால் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 40 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் பெரிய பிளவுகள் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சரிந்து விழுந்ததில் தீப்பற்றியதால் பெரும் சோகம்!


