Last Updated:
கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இந்தப் போட்டியில் களம் இறங்குகிறார். அவர் 4 ஓவர்கள் வீசுவதுடன் பேட்டிங்கிலும். அதிரடியாக விளையாடுவார் என்பதால் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஐபிஎல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் வலுவான, மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. நடப்பு சீசனில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடி அதில் தோல்வி அடைந்துள்ளன.
இந்நிலையில் முதல் வெற்றியைப் பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது. குஜராத் அணியைப் பொறுத்தவரையில் அந்த அணி தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் குஜராத் அணியின் பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினர். அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 243 ரன்கள் குவித்தது. 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணி, 232 ரன்கள் வரை எடுத்தது.
குஜராத் அணியின் பேட்டிங் வரிசை பலமானதாக உள்ளது. அந்த அணியின் சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில், ஜோஸ் பட்லர், ரூதர்போர்டு, ராகுல் தெவாட்டியா, ஷாருக் கான் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளார்கள். பவுலிங்கைப் பொறுத்தளவில் சாய் கிஷோரைத் தவிர்த்து மற்ற அனைத்து பவுலர்களும் திறமையை வெளிப்படுத்தவில்லை.
மும்பை அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளதால் குஜராத் அணியின் பவுலர்கள் திறமையாக வீசினால் மட்டுமே மும்பையின் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்த முடியும். மும்பை அணி தனது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பேட்டிங் வரிசை வலுவானதாக இருந்தாலும் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் திறமையான ஆட்டத்தை மும்பை பேட்ஸ்மேன்களால் வெளிப்படுத்த முடியவில்லை. ரோஹித் சர்மா, ரிக்கெல்டன், பில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா என பல அதிரடி பேட்ஸ்மேன்கள் அணியில் இருப்பதால் அந்த அணி அதிக ரன்கள் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இதையும் படிங்க – IPL 2025 : ஷிகர் தவான் என் வழிகாட்டி… அசுதோஷ் சர்மா புகழாரம்
மேலும் கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இந்தப் போட்டியில் களம் இறங்குகிறார். அவர் 4 ஓவர்கள் வீசுவதுடன் பேட்டிங்கிலும். அதிரடியாக விளையாடுவார் என்பதால் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. போட்டி இரவு 7:30 மணிக்கு. தொடங்குகிறது.
March 29, 2025 5:16 PM IST


