Last Updated:
இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்திப் சிங் மற்றும் சிவம் துபே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அயர்லாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 155 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் 2 ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி அயர்லாந்தின் பெல்ஃபெஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்திப் சிங் மற்றும் சிவம் துபே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
அயர்லாந்து அணியில் தொடக்க வீரர்கள் டிம் டெக்டர் 5 ரன்களும், ராஸ் அடைர் 16 ரன்களும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹேரி டெக்டர் 53 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
மற்ற வீரர்களில் கேப்டன் லோர்கன் டக்கர் 15 ரன்களும், பெஞ்சமின் கேலிட்ஸ் 19 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 19 ரன்களும் எடுத்தனர். தற்போது 155 ரன்கள் எடுத்தால் தொடரை சமன் செய்யலாம் என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.


