தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் நகை வாங்குவோர் எண்ணிக்கை குறையும் என அஞ்சுகின்றனர்.
கடந்த தீபாவளியில் இருந்து தங்கம் விலை சுமார் 25-30% வரை உயர்ந்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தங்கம் தற்போது அதிகபட்ச விலையை எட்டியுள்ளது.
அக்டோபர் 23 அன்று சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் $2,759 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. அதன் பிறகு $2,700 டாலருக்கு மேல் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.59,000-த்தை தொட்டது. அதே சென்ற ஆண்டு தீபாவளியன்று சென்னையில் தங்கம் விலை ரூ.44,800 ஆக இருந்தது.
இதையும் படிக்க:
போஸ்ட் ஆஃபிசில் தொடங்கப்படும் SIP திட்டம்? வெளியான முக்கிய தகவல்
நகை வியாபாரிகளின் கவலை:
தொடர்ந்து உயர்ந்து வரும் தங்க விலை நகை வியாபாரிகளை கவலையடைய வைத்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு தீபாவளி சீசனில் விற்பனை குறையலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, அகில இந்திய நகை மற்றும் நகைக் கற்கள் உள்நாட்டு கவுன்சில் இயக்குனர் அவினாஷ் குப்தா கூறுகையில், ‘‘தங்க விலை அதிகரிப்பு இந்த ஆண்டு தீபாவளி சீசனில் எங்களை பாதிக்கும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன் நகை கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால் இந்த ஆண்டு அப்படி இல்லை’’ என்று அவர் கூறினார்.
குறைந்த விலை நகைகள் மீது கவனம்:
மேலும் தங்க விலை உயர்ந்துள்ளதால், நுகர்வோர் குறைந்த விலை கொண்ட நகைகளை வாங்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட நகைகள் மீது அதிக கவனம் செலுத்துகின்றனர்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, நகை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் திட்டங்களை அறிவிக்க நகை வியாபாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், பல நகை கடைகளில் தள்ளுபடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)