ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தையும் (EPS) நடத்துகிறது. இதன் கீழ் EPF கணக்கு வைத்திருப்பவர் 58 வயதில் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறத் தகுதியுடையவர் ஆகிறார் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், சில நிபந்தனைகளின் கீழ், தனது 10 ஆண்டுகள் பணி முடித்திருந்தாலும் அவரின் 50 வயதில் மாதாந்திர ஓய்வூதியத்தை பெற ஆரம்பிக்கலாம் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவை சில மட்டுமே; EPFO இன்னும் 5 வகையான ஓய்வூதியங்களை வழங்குகிறது. அதாவது EPFO வழங்கும் அனைத்து 7 வகையான ஓய்வூதியங்கள் குறித்தும் இங்கு விரிவாக பார்ப்போம்.
1. சூப்பர் ஆனுவேசன் ஓய்வூதியம்:
EPFO கணக்கு வைத்திருப்பவர் 58 வயதிலும் அவரின் 10 வருட சேவையை முடித்தவுடன் சூப்பர் ஆனுவேசன் என்ற ஓய்வூதிய பலனை பெறலாம்.
2. ஆரம்பகால ஓய்வூதியம்:
EPF கணக்கு வைத்திருப்பவர் 50 வயதுக்கு மேற்பட்டவராகவும், 10 வருட சேவையை முடித்தவராகவும், EPF அல்லாத நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார் என்றாலும், அவர்கள் முன்கூட்டியே ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார். மேலும் ஓய்வூதிய வயதான 58 வயதுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் 4% குறைவாகவே இருக்கும். உதாரணமாக, ஒருவர் 58 வயதில் ரூ.10,000 மாதாந்திர ஓய்வூதியம் பெற தகுதியுடையவராக இருந்தால், 57 ல் ரூ.9,600 மற்றும் 56ல் ரூ.9,200 ஓய்வூதியமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
3. விதவை அல்லது குழந்தை ஓய்வூதியம்:
EPF கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், விதவை (அவரது மனைவி) மற்றும் அவரின் 25 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் விதவை ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள் ஆகிறார்கள் . மேலும் அவர்களின் குழந்தைகளுக்கு 25 வயதாகும் போது ஓய்வூதிய தொகை பெற தகுதியற்றவர்கள் ஆகிறார்கள்.
4. அனாதை ஓய்வூதியம்:
EPF கணக்கு வைத்திருப்பவர் மற்றும் அவரது மனைவியும் இறந்தால், 25 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் அனாதை ஓய்வூதியம் பெறலாம். மேலும், 25 வயதை அடைந்தவுடன், ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
5. சார்ந்திருக்கும் பெற்றோரின் ஓய்வூதியம்:
ஒருவேளை EPF கணக்கு வைத்திருக்கும் நபர் திருமணமாகதவராக இருந்து, அவர் இறந்து விட்டால் அவரின் ஓய்வூதியத்தொகை அவருடைய தந்தைக்கும் , தந்தை இறந்த பிறகு அவரின் தாயாருக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார்.
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
6. ஊனமுற்றோர் ஓய்வூதியம்:
EPF கணக்கு வைத்திருக்கும் PF உறுப்பினர் ஊனமுற்றவராக (நிரந்தர அல்லது தற்காலிகமாக) இருந்தால், இந்த வகையான ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர் ஆகிறார். மேலும் அவர், 10 ஆண்டுகள் சேவை அல்லது குறைந்தபட்சம் 50 வயதை பூர்த்தி செய்யத் தேவையில்லை.
7. நியமன ஓய்வூதியம்:
EPF உறுப்பினர் தனது மரணத்திற்கு பிறகு ஓய்வூதிய தொகையை பெற யாரையாவது நாமினி செய்திருந்தால் , அத்தகைய நபர் நாமினி ஓய்வூதியத்தை பெறலாம். EPFO போர்ட்டலில் ஒருவரை இ-நாமினேட் செய்யலாம்.
.
&w=750&resize=750,375&ssl=1)
