ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் செழுமையாகப் பசுமையாக இருந்த கோதுமைப் பயிர்கள், ஒரே வாரத்தில் வெளிறிய வெள்ளை நிறமாக மாறி கருகத் தொடங்கியுள்ளன. ஐரோப்பாவை இந்த அளவுக்கு வாட்டி வதைப்பதற்கு, ஒமேகா பிளாக் எனப்படும் வளிமண்டல உயர் அழுத்தக் காற்று சுழற்சியை முக்கிய காரணமாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதாவது, கிரேக்க எழுத்தான ஒமேகா வடிவில், வளிமண்டலத்தில் ஒரு பிரம்மாண்ட உயர் அழுத்தக் காற்று அரண் போலத் தேங்கி நிற்பதாகவும், இது சஹாரா பாலைவன வெப்ப காற்றை ஐரோப்பாவிற்குள் இழுத்து, ஒரு மூடி போட்ட பாத்திரம் போலத் தேக்கி வைத்துள்ளதாகவும் விவரித்துள்ளனர்.


