சீனா…
மீண்டும், சீனாவில் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் இடம்பெயர்க்கப்படுவார்கள். பல கட்டடங்கள் அழிக்கப்படும்…அரிய மற்றும் அருகி வரும் உயிரினங்கள் அழியலாம்.
சீனாவை பொறுத்தவரை, உலக அளவில் வளர்ந்த நாடாகவும், பெரிய பொருளாதார நாடாகவும், நம்பர் ஒன் நாடாகவும் ஆக வேண்டும் என்பது கனவு. ஏன் வெறி என்றே கூட சொல்லலாம். இதற்காக அவர்கள் பல விஷயங்களையும், முன்னெடுப்புகளையும் செய்துகொண்டே வருகிறார்கள். அப்படியான ஒன்று தான் இந்த அணை கட்டுமான முடிவும். இந்த அணைக்கான தேவை இருப்பதைக் காட்டிலும், இதனால், பல தீமைகள் உண்டாகலாம்.
நீர் சேமிப்பு, உலகிலேயே பெரிய அளவிலான மின்சார உற்பத்தி ஆகியவை தி கார்ஜஸ் டேமுக்கு காரணமாக கூறப்பட்டாலும், பெரிய அளவிலான வெள்ளங்களை தடுத்து மக்களை பாதுகாப்பதும், வெள்ளத்தால் பரவும் தொற்றுநோய்களை தடுப்பதும் அந்த டேமின் முக்கிய நோக்கம் என்று கூறப்பட்டது. ஆனால், தீ கார்ஜஸ் டேம் கட்டப்பட்டப்பிறகு தான், அந்தப் பகுதியில் நிலச்சரிவுகள் மற்றும் நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படுகின்றன.
புது டேம்…
இப்போது புதியதாக கட்டப்படும் டேம் குறித்து இதுவரை வெளியாகி உள்ள தகவல்கள்…
இந்த டேம் கட்டப்பட்டு முடித்த உடன், இதுவே உலகின் மிகப்பெரிய ஹைட்ரோபவர் திட்டமாக இருக்கும். இந்த அணையில் இருந்து ஆண்டுக்கு 300 பில்லியன் kWh மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். தி கார்ஜஸ் அணையில் இப்போது ஆண்டுக்கு 88.2 பில்லியன் kWh உற்பத்தி செய்யப்படுகிறது.
அதனால், 1.3 மில்லியனுக்கு மூன்று மடங்கு அதிகமான மக்கள் இந்தப் புது அணை திட்டத்திற்காக இடம்பெயர்க்கப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதை சீன அரசு இன்னும் உறுதி செய்யவில்லை.

