Last Updated:
சீன விஞ்ஞானிகள் பல்வேறு திறன் கொண்ட ரோபோக்களை வடிவமைத்து வருகின்றனர். அதில் 2 ரோபோக்கள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன.
சீனாவில் நடைபெற்ற டிராகன் படகு திருவிழாவில் ரோபோக்கள் துல்லியமாக துடுப்புகளைப் போட்டு பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தின.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் டிராகன் படகு திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொண்ட “டியோங்கோங்” எனப் பெயரிடப்பட்ட ரோபோக்கள், துடுப்புகளைப் போட்டு படகை இயக்கின. தொடக்கத்தில் சற்று சிரமப்பட்ட ரோபோக்கள், பின்னர் மனிதர்களுடன் ஒருங்கிணைந்து துடுப்புகளைப் போட்டன. ஒரு கட்டத்தில், மனிதர்கள் இன்றி தனியாகவே துடுப்பு போடும் அளவிற்கு ரோபோக்கள் திறன் பெற்றன. இது ஒரு புறம் இருக்க, உரலில் அரிசியைக் குத்தி உணவு தயாரிக்கும் பணியிலும் ரோபோக்கள் ஈடுபட்டன.
This Dragon Boat Festival, tradition met innovation in southwest China’s Sichuan Province as humanoid robots from Beijing not only paddled alongside human rowers in dragon boat races but also learned to make glutinous rice cakes and dumplings, infusing the traditional celebration… pic.twitter.com/kG2vM1QMAf
— CCTV+ (@CCTV_Plus) June 20, 2026
பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 22 முதல் 26 ஆம் தேதி வரை ரோபோக்களுக்கான சர்வதேசப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்கும் வகையில், அந்நாட்டு விஞ்ஞானிகள் பல்வேறு திறன் கொண்ட ரோபோக்களை வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


