அமெரிக்காவில், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததகவும் அதை மறைக்க முயற்சிகள் மேற்கொண்டதாகவும் இந்திய தொழிலதிபர் அதானி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனத்துக்கான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, 263 மில்லியன் டாலர்கள் அதாவது 2029 கோடி ரூபாய் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் 6 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாநில மின்சார விநியோக நிர்வாகங்களுடனான சோலார் மின்சக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக 2020ம் ஆண்டும் முதல் 2024ம் ஆண்டுவரை பெரும் தொகை இதற்காக கைமாற்றப்பட்டுள்ளது என்கிறது அமெரிக்க நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை.

