கயாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிகார் மாநிலம், கயா மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் வியாழக்கிழமை மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரூபேஷ் பாஸ்வான், பப்லூ குமார் மற்றும் உதய் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைதான அனைவரும் கயாவில் பிப்ரவரியில் இறந்துகிடந்த மாவோயிஸ்ட் மண்டல தளபதி விவேக் யாதவிடம் பணிபுரிந்தவர்கள்.
ஹாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு!
மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், சுமார் 5 கிலோ எடையுள்ள கேன் குண்டு, கம்பிகளுடன் ஆறு டெட்டனேட்டர்கள் என ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட காவல்துறையுடன் ஒருங்கிணைந்து, கடந்த 15 நாள்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 நக்சலைட்டுகளை சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

