Last Updated:
சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணி சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் தொடக்க சீசனில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்கின் தொடக்க சீசனில், சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் அடங்கிய உலகின் 6 நாடுகளின் அணிகள் பங்கேற்ற இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரின் முதல் சீசன் இந்தியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (16.03.2025) ராய்ப்பூரில் நடைபெற்றது. இதில், சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய மாஸ்டர்ஸ் அணியும், பிரைன் லாரா தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணியும் மோதின.
இந்தியா மாஸ்டர்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 148 ரன்கள் எடுத்த நிலையில், அம்பதி ராயுடுவின் அதிரடி அரைசதத்தின் மூலம், இந்தியா மாஸ்டர்ஸ் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. கிட்டத்தட்ட 50,000 ரசிகர்கள் இந்த ஆட்டத்தை பார்க்க கூடினர்.
இறுதிப் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணி ஆல்ரவுண்ட் செயல்திறனை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்றது. இந்த வெற்றியின் மூலம், டெண்டுல்கர் தலைமையிலான அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
இந்திய மாஸ்டர்ஸ் அணிக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. தோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. இதுதவிர ஆட்ட நாயகன் அம்பதி ராயுடுவுக்கு ரூ. 50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 17, 2025 2:24 PM IST


