Last Updated:
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் 5 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஹைதராபாத் மாளிகையில் அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதை தொடர்ந்து நடந்த உயர்மட்ட ஆலோசனைக்கு பிறகு, இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தோ-பசிபிக் பெருங்கடல் பாதுகாப்பு கூட்டு முயற்சியில் நியூசிலாந்து இணைவதை வரவேற்பதாக கூறினார். முன்னதாக டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்ற நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
March 17, 2025 6:36 PM IST


