இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இடையே முதன்முறையாக கடந்த 1887-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 150-வது வருட கொண்டாட்டத்தையொட்டி பகலிரவு டெஸ்ட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2027-ம் ஆண்டு மார்ச் 11 முதல் 15-ம் தேதி வரை மெல்பர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் பிங்க் பந்து போட்டியில் விளையாடும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் பிரனாய் தோல்வி
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 29-ம் நிலை வீரரான இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், 17-ம் நிலை வீரரான பிரான்ஸின் தோமா ஜூனியர் போப்போவுடன் மோதினார். 53 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரனாய் 19-21,16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.