• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ATM எல்லாம் ஓரமா ஒதுக்குங்க… இனி ஆதார் அட்டை இருந்தாலே பணம் எடுக்கலாம்

GenevaTimes by GenevaTimes
November 19, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ATM எல்லாம் ஓரமா ஒதுக்குங்க… இனி ஆதார் அட்டை இருந்தாலே பணம் எடுக்கலாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாம் தற்போது ஷாப்பிங் செய்வதற்கு, ரீசார்ஜ் செய்ய, பில் பேமெண்ட்கள் போன்ற பல்வேறு விஷயங்களுக்கு ஆன்லைன் டிரான்சாக்‌ஷன்களை மேற்கொள்கிறோம். இந்தியாவில் டிஜிட்டல் டிரான்சாக்‌ஷன்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும் பல சூழ்நிலைகளில் இன்னும் பணத்தேவை என்பது இருக்கத்தான் செய்கிறது.

வழக்கமாக நாம் பணத்தை வங்கிகள் அல்லது ATM மூலமாக வித்ட்ரா செய்வோம். ஆனால் ஒரு வேளை நீங்கள் ATM கார்டு எடுத்துச் செல்ல மறந்து விட்டால் ஆதார் கார்டு இருந்தாலே பணத்தை வித்ட்ரா செய்யலாம். இந்த சேவை ஆதார் எனேபிள்டு பேமெண்ட் சிஸ்டம் (Aadhar Enabled Payment System) என அழைக்கப்படுகிறது. இது நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

ஆதார் எனேபிள்டு பேமெண்ட் சிஸ்டம் (Aadhar Enabled Payment System):

ஒருவர் தன்னுடைய ஆதார் கார்டு நம்பர் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை பயன்படுத்தியே பல்வேறு வங்கி செயல்பாடுகளை செய்வதற்கு AEPS அனுமதிக்கிறது. பணத்தை வித்ட்ரா செய்வது, பேலன்ஸ் குறித்து என்கொயரி மற்றும் மைக்ரோ ATMகளில் ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் மற்றும் பிற பேங்கிங் ஏஜெண்டுகள் போன்ற பொருளாதார சம்பந்தப்பட்ட சேவைகளுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:
போஸ்ட் ஆபீஸில் மாதம் ரூ.2000 முதலீடு செய்தால் 5 வருடத்தில் எவ்வளவு கிடைக்கும்?

ஆதார் அட்டையை பயன்படுத்தி பணத்தை எப்படி வித்ட்ரா செய்வது?:

ஆதார் அட்டை மூலமாக பணத்தை வித்ட்ரா செய்வதற்கு உங்களுடைய அந்த குறிப்பிட்ட அக்கவுண்டில் ஆதார் நம்பர் கட்டாயமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது ஆதாரை பயன்படுத்தி பணத்தை எப்படி வித்ட்ரா செய்யலாம் என்பதை பார்ப்போம்.

  • பேங்கிங் ஏஜென்ட் அல்லது AEPS சேவைகளை ஆதரிக்கும் அருகில் உள்ள மைக்ரோ ATMக்கு செல்லவும். இது பொதுவாக கிராமப்புறங்கள் அல்லது மொபைல் பேங்கிங் சேவைகளில் காணப்படும்.

  • மைக்ரோ ATMல் உங்களுடைய 12 டிஜிட் ஆதார் எண்ணை என்டர் செய்யவும். நீங்கள் சரியான தகவலை உள்ளிடுகிறீர்கள் என்பதை ஒரு முறைக்கு இரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • அடுத்ததாக ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரில் உங்களுடைய கட்டைவிரல் ரேகையை வைக்கவும்.

  • இந்த செயல்முறை வெற்றிகரமாக நிறைவு பெற்றதும் உங்களுக்கு பல்வேறு ஆப்ஷன்கள் வழங்கப்படும். அதில் பணத்தை வித்ட்ரா செய்வதற்கு ‘கேஷ் வித்டிராவல்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

  • நீங்கள் வித்ட்ரா செய்ய நினைக்கும் தொகையை என்டர் செய்யவும்.

  • ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் நீங்கள் குறிப்பிட்ட தொகை இருக்கும் பட்சத்தில் அந்த தொகை உங்களுக்கு வழங்கப்படும்.

  • மேலும் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு இந்த ட்ரான்ஷாக்ஷன் குறித்த SMS அனுப்பி வைக்கப்படும்.

நிபந்தனைகள்:

*பெரும்பாலான வங்கிகள் AEPS சேவை மூலமாக ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை வித்ட்ரா செய்ய அனுமதிக்கின்றன.

*ஒரு சில பாதுகாப்பு பாலிசிகளுக்காக சில வங்கிகள் AEPS சேவைகளை துண்டித்துள்ளன.

விளம்பரம்

AEPS பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் வழக்கமான பேங்கிங் சேவைகள் எளிதாக கிடைக்காத பகுதிகளில் வாழும் மக்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக அமையும். உங்களுடைய பயோமெட்ரிக் விவரங்களை வழங்குவதன் மூலமாகவே எளிமையான முறையில் பணத்தை வித்ட்ரா செய்து கொள்ளலாம்.

ATM அல்லது வங்கிக்கு செல்ல இயலாத சூழ்நிலையில் இந்த சேவையை நீங்கள் பயன்படுத்தலாம். மேலும் வங்கிக்கு செல்ல முடியாத அல்லது ATM-ஐ எப்படி இயக்குவது என்பதை அறியாத மாற்றுத்திறனாளிகள் அல்லது முதியவர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.

விளம்பரம்
தமனிகளின் அடைப்பை நீக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 9 சாறுகள்.!


தமனிகளின் அடைப்பை நீக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 9 சாறுகள்.!

AEPS பாதுகாப்பு:

*அங்கீகரிக்கப்பட்ட வங்கி அமைப்புகளில் மட்டுமே உங்களுடைய ஆதார் எண்ணை வழங்கவும்.

*ட்ரான்சாக்ஷன் குறித்த அலர்ட்களை பெறுவதற்கு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் அப்-டு-டேட் ஆக இருக்க வேண்டும்.

*ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை சுத்தமான மற்றும் பாதுகாப்பான சூழலில் மட்டுமே பயன்படுத்தவும்.

AEPS சேவையை ஆதரிக்கும் வங்கிகளின் பட்டியல்:

இந்தியாவிலுள்ள பல்வேறு தேசிய மற்றும் உள்ளூர் வங்கிகள் AEPS சேவைகளை ஆதரிக்கின்றன. எனினும் வங்கி கிளை அல்லது பகுதியை பொறுத்து AEPS சேவை கிடைக்கும் தன்மை மாறலாம்.

விளம்பரம்

.

Read More

Previous Post

மனைவியை பிரியும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்… 29 ஆண்டுகால உறவு முடிவுக்கு வந்தது… – News18 தமிழ்

Next Post

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: நவம்பர் 20, 2024

Next Post
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: நவம்பர் 20, 2024

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: நவம்பர் 20, 2024

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin