கொழும்பு – மட்டக்குளி பகுதியில் சற்றுமுன் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து இன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. R



