Last Updated:
மாணவர்களின் வாழ்வில் குழந்தைத்தனத்தையும் அவர்களின் இயல்பான தேடலையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே ஆசிரியர்களின் மிகப்பெரிய பங்களிப்பாகும்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, தற்போதைய நவீன சமூகத்தில் பள்ளி மாணவர்கள் சந்திக்கும் பல்வேறு சவால்கள் குறித்தும், அவற்றில் ஆசிரியர்களின் பங்கு குறித்தும் பிரதமர் மோடி விரிவாகப் பேசினார்.


