கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராக லலித் கன்னங்கர அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
டுபாயில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரும், ‘பஸ் லலித்’ என அழைக்கப்படுபவருமான லலித் கன்னங்கர, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவரை, இலங்கைக்கு அழைத்து வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை பொலிஸின் விசேட குழுவினர் அவரை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.
கொலை, கப்பம் பெறுதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கையில் தேடப்பட்டு வந்த சந்தேகநபராக லலித் கன்னங்கர அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக சர்வதேச சிவப்பு அறிவித்தலும் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரச புலனாய்வுச் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று டுபாய் சென்றிருந்தது.
இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கரவிடம், அவர் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


