கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் அதிகாரிகள், நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை மற்றும் பிற்பகல் வேளையில் கோமகல பகுதியில் இந்தச் சோதனைகளை மேற்கொண்டனர்.
மொனராகலையின் ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு வெவ்வேறான சோதனைகளின் போது, 1,044 கிலோகிராமுக்கும் அதிகமான கஞ்சா மற்றும் 54,000க்கும் அதிகமான கஞ்சா செடிகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் அதிகாரிகள், நேற்று சனிக்கிழமை (22) அதிகாலை மற்றும் பிற்பகல் வேளையில் கோமகல பகுதியில் இந்தச் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதில் ஒரு சோதனையின் போது, ஒரு சந்தேகநபர் 1,044 கிலோ மற்றும் 180 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். மற்றொரு சோதனையில், 54,096 கஞ்சா செடிகளைத் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வேறொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 38 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் எதம்பலவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

